புதுச்சேரி திருபுவனை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம் ஜேஎம்ஐ கார்டனை சேர்ந்தவர் மகேஸ்வரி (38). இவருக்கும், அதே பகுதி யைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்செந்தில்குமாருக்கும் 2006-ல் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங் களிலேயே கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே மகேஸ்வரிக்கு குழந்தை பிறந்த நிலையில், ஆசிரியர் செந்தில்குமார் பள்ளி யில் மாணவி ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.
இம்மாணவிக்கு 18 வயது பூர்த்தியான நிலையில் மனைவிக்கு தெரியாமல் தனது குடும்பத்தினர் உதவியுடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இதையறிந்த மகேஸ்வரி கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், வோறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவர் செந்தில்குமார், அதற்கு துணையாக இருந்த மாமனார், மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் மீது வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் செந்தில்குமார், மாமியார் வத்தீஸ்கா, மாமனார் நாராயணன், கணவரின் சகோதரர் ஞானசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago