கோவை விமானத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

By க.சக்திவேல்

கோவை: ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ1.10 கோடி மதிப்பிலான தங்கத்தைக் கைப்பற்றிய மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர்.

வெளிநாட்டில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தல் செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய்ப் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் நேற்று (டிச.29) சோதனையில் ஈடுபட்டனர்.

ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த 4 பேரை சோதனை செய்ததில், அவர்கள் மலக்குடலில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2.20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகுபார் சாதிக் சையத் முகமது, நசர்தீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா, தஸ்தகீர் காஜாமைதீன் என்பது தெரியவந்தது. இதில், நசர்தீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா ஆகியோரை மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற இருவரும் அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

4 mins ago

க்ரைம்

39 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்