கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

By என்.கணேஷ்ராஜ்

கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை மரப்பாலம் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கூடலூர் ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கௌதம்(19) மற்றும் கூடலூர் பஸ்டாண்டு பின்புறம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பிரகதீஸ்வரன் (17) இருவரும் உறவினர்கள்.

கௌதம் பன்னிரண்டாவது வரை படித்துள்ளார். பிரகதீஸ்வரன் கோட்டூரில் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நண்பர்கள் கேசவன், ஸ்ரீஜித் ஆகியோருடன் கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை மரப்பாலம் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

ஆற்றில் குளித்தக் கொண்டிருக்கையில், பிரகதீஸ்வரன், கௌதம் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீந்த முடியாமல் தண்ணீரில் சிக்கியுள்ளனர். உடன் சென்ற நண்பர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அதற்குள் தண்ணீரின் ஆழமான பகுதியில் சிக்கிய கௌதம், பிரகதீஸ்வரன் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி இருவரின் உடலையும் மீட்டனர்.

இதுகுறித்து லோயர்(குமுளி) போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்ஙதனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக எஸ்.ஐ நேரு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்