சிறுமியின் கர்ப்பத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் உள்ளிட்ட இருவரை திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குமாரபாளையம் சத்யா நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி குமரேசன் (41). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவருடன் குமரேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பெண்ணின் 15 வயது மகளையும், குமரேசன் தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். இதனால், அச்சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குமரேசன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago