கோவில்பட்டியில் இளம்பெண் மர்ம மரணம்: ரத்த மாதிரி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

By எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து அவரது ரத்த மாதிரியை சேகரித்து கரோனா பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பியுள்ளனர்.

கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த சௌந்தரராஜ் மனைவி கற்பகம்(29). 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்துள்ளது. இன்று அதிகாலை கற்பகத்துக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜோதியை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கற்பகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவருக்கு சளி, இருமல் மற்றும் மூச்சு திணறல் இருந்ததால், அவரது இறப்புக்கான காரணம் குறித்து அறிய அவரது உடலில் இருந்து சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கை அடிப்படையில் தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்