இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சாவை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தது சுங்கத்துறை அதிகாரிகள் எஸ்.பி பட்டிணம் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடற்கரையில் மறைத்து வைக்கபட்டிருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர்.
அந்த சாக்கு மூட்டைகளில் 11 பண்டல்கள் இருந்தன. மொத்தம் 380 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
41 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago