சென்னை: தரமணியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, தி.நகர், மேட்லி 2வது தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 29-ம் தேதி மாலை வேளச்சேரி தாலுகா அலுவலகம் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் கத்தியால் தாக்கி கொலை செய்து தப்பியது. இதுகுறித்து தரமணி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்படை போலீஸார் கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சுப்பையன் (68), பெரும்பாக்கம் எழில்நகர் குமார் (32), அதே பகுதி சூர்யா (24), ஆறுமுகம் (24), ராமநாதபுரம் இலமநேரி சைவபாண்டி (30), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் காளீஸ்வரன் (26) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கத்திகள், 3 செல்போன் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நிலம் வாங்க ரூ.28 லட்சம்: இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட பழனிச்சாமி நிலம் வாங்கி தருவதாக சுப்பையன் என்பவரிடம் ரூ.28 லட்சம் பணம் பெற்று நிலத்தை வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு பழனிச்சாமியை கொலை செய்துள்ளார்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
19 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
38 mins ago
விளையாட்டு
52 mins ago
சினிமா
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago