மேட்டூரில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் தற்கொலை

By செய்திப்பிரிவு

மேட்டூர்: மேட்டூர் மைக்கேல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டசபரி (37). இவர் மேட்டூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி நர்மதா (36). இவர் துணை ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பிரிவுதுணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், துணை வட்டாட்சியர் நர்மதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மேட்டூர் போலீஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலைப் பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்த நர்மதா,அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

6 mins ago

வாழ்வியல்

16 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

40 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்