பம்மல் | ஓட்டலில் கூடுதல் சாம்பார் தராத சூபர்வைசர் படுகொலை: தந்தை, மகன் கைது

By செய்திப்பிரிவு

பம்மல்: சென்னை ஓட்டலில் சாம்பார் தராத சூபர்வைசர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப் பட்டுள்ளனர். பல்லாவரம் அருகே பம்மலில் செயல்படும் ஓட்டலில் தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூபர்வைசராக பணியில் இருந்துவந்தார்.

இந்நிலையில், நேற்றுஅந்த உணவகத்துக்கு அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகரில் வசித்து வரும் சங்கர் (55), அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பாடு பார்சல் வாங்க வந்தனர்.

அவர்களுக்கான பார்சல் கட்டி கொடுக்கப்பட்டபோது, தங்களுக்கு கூடுதலாக சாம்பார் பாக்கெட் ஒன்று வேண்டும் என்று தந்தை, மகன் இருவரும் கேட்டதாக கூறப்படுகிறது. அருண் கொடுக்க மறுத்தார்.

இதனால் தந்தை சங்கரும், மகன் அருண்குமாரும் சேர்ந்து சூபர்வைசர் அருணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து சூபர்வைசர் அருணை தாக்கத் தொடங்கினர்.

இதில், நிலை குலைந்த அருண், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அருண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சூபர்வைசரை தாக்கி கொலை செய்த இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

சினிமா

3 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்