திருப்பூர்: பல்லடம் அருகே லாரி மற்றும் கார் மோதிய விபத்தில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த நண்பர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் - திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள் பூபாபலன் (22), நிதிஷ் (23) மற்றும் பிரேம்குமார் (23). மூவரும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நாமக்கல் - பொள்ளாச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரை கடக்கும்போது, எதிரே கள்ளிக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து, கார் நொறுங்கியது.
நண்பர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் பல்லடம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள 3 பேரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து, சரக்கு லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
7 hours ago