தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி முன்னாள் அதிமுக உறுப்பினரும், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜி.எஸ்.பிரபு (38). சமூக ஆர்வலரான இவர் பிளக்ஸ் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்தார்.
தற்போது மைக்கேல்பட்டி பாம்பாளம்மன் கோயில் அருகே வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது பணிகளை முடித்துவிட்டு பழமார் நேரி சாலையில் உள்ள அவரது சகோதரர் வீட்டின் அருகே ஒரு கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு. சுமார் 10.30 மணி அளவில், அந்த இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிரபுவின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பிரபு-வுக்கும் அதே பகுதியிலுள்ள இடம் தொடர்பாகவும் மற்றும் அதே பகுதியில் உள்ள மற்றொருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுவதால் இது தொடர்பாக சிலரிடம், ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago