சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 259, பெண்கள் 233 என மொத்தம் 492 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 109 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 76,814 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 33,848 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 431 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 4,926 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 479 ஆகவும், சென்னையில் 105 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
முன்னதாக, இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,664 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 47,922 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4,555 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 216.56 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
10 mins ago
சுற்றுலா
13 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
38 mins ago
சினிமா
33 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago