சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளில் கரோனா வைரஸால் 37,370 பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்

By செய்திப்பிரிவு

சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளில் கரோனா வைரஸுக்கு 37,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “சீனாவைத் தவிர்த்து கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு சுமார் 113 நாடுகளில் 37,370 பேர் பாதிக்கபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கோவிட் 19 காய்ச்சலை பேண்டமிக் நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ( பேண்டமிக் என்றால் உலகம் முழுவதும் பெரும் பரவலாக இருக்கிற தொற்று நோய் என்று அர்த்தம்).

கோவிட் காய்ச்சலைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு தொடர் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலகம் முழுவதும் சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட் - 19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்