'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சுஜாவின் செயல்பாடுகளை மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறியவுடன், புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பட்டவர் சுஜா வாரூணி. பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா இருக்கும் போதே, தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக ட்வீட்களை வெளியிட்டு வந்தவர் சுஜா வாரூணி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டு வாசலில் 'OVIYA COME SOON' என்று கோலமிட்டிருந்தார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓவியாவைப் பற்றி உண்மையாக தெரிந்தவர்கள், அவரது பெயரை ஜெயிப்பதற்காக உபயோகிக்கக் கூடாது" என்று ட்வீட்டியுள்ளார். இதன் மூலம் சுஜாவை மறைமுகமாக சாடியுள்ளார் காயத்ரி ரகுராம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், சுஜாவின் செயல்பாடுகளுக்கும் இணையத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தொடர்ச்சியாக ஓவியாவைப் போலவே தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் ரசிகர்களை கவர முயற்சிக்கிறார் அது நடைபெற வாய்ப்பில்லை என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
சினிமா
6 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
39 mins ago
உலகம்
46 mins ago
இந்தியா
57 mins ago
கார்ட்டூன்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago