என் அன்பானவளுக்கு நன்றி: நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்

By ஸ்கிரீனன்

தன் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து 'என் அன்பானவளுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு சமயத்தில் காதல் உருவானது. இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

'தானா சேர்ந்த கூட்டம்' படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த இடைவெளியில், தன் பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாராவுடன் நியூயார்க் நகரத்துக்குச் சென்றார் விக்னேஷ் சிவன். மேலும், இதுவரை நயன்தாரா நடித்த படங்களைப் பற்றி கருத்துச் சொல்லி வந்தவர், அவருடன் புகைப்படங்களைக் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததில்லை.

நியூயார்க்கில் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இப்படியான ஒரு பிறந்தநாள் வரும் என கனவு கூட கண்டதில்லை. கடவுளுக்கு முதலில் நன்றி. இந்த வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் மாற்றிய என் அன்பானவளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

செப்டம்பர் 25-ம் தேதி முதல் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடித்து பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 mins ago

தமிழகம்

32 mins ago

கல்வி

34 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்