தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் உறுதியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகிறது விஷாலின் 'துப்பறிவாளன்'.
'துப்பறிவாளன்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடையும் தருவாயில் தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. அப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளிக்கவே, செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, கே.பாக்யராஜ், வினய், ஆண்ட்ரியா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'துப்பறிவாளன்'. அரோல் குரேலி இசையமைப்பில் உருவாகியிருக்கும் படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் விஷால்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago