பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை பெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் ஓவியா மட்டுமே. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாலும், சமூகவலைதளத்தில் அவருக்கான ஆதரவுக் குரல் பெருமளவில் பெருகி வருகிறது.
ஆரவ்வை காதலிக்கிறேன் என்று சொல்லி வந்தவர், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கொச்சியில் ஓய்வெடுத்து வந்தார். "இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லை" என்று அறிவித்தவர், தனது ட்விட்டர் பக்கத்திற்கும் வராமல் இருந்தார். நீண்ட நாட்கள் கழித்து "உங்கள் ஒவ்வொருவரிடமிருந்து பெறும் அன்புக்கும் அக்கறைக்கும் என்னிடம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, நான் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன், மிக்க நன்றி, உங்கள் அனைவரின் அன்பினாலும் மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது" என்று ட்வீட்டினார்.
தற்போது ஆரவ்வை இன்னமும் காதலித்து வருவதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "தனியாகவும், திருப்தியாகவும் இருக்கிறேன்(Relationship status:single and satisfied)" என்று தெரிவித்துள்ளார்.
ஓவியாவின் சமீபத்திய 2 ட்வீட்களுக்கு சமூகவலைதளத்தில் அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், பல படங்களில் ஓவியாவை நடிக்க வைப்பதற்கு, பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆனால், இன்னும் சில காலம் ஓய்வெடுத்துவிட்டு தான் திரும்புவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் விஷ்ணு விஷாலுடன் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ஓவியா. அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே நடித்தது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் இன்னும் எந்தவொரு படமும் ஒப்புக் கொள்ளாமல் இருந்து வருகிறார் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
உலகம்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago