பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்களில் யாருக்கு என்ன விருது?

By ஸ்கிரீனன்

பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்களில் நேற்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விருது வழங்கப்பட்டது.

நாளை (செப்டம்பர் 30) பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.

இறுதிப் போட்டியில் சிநேகன், பிந்துமாதவி, ஹரிஷ், ஆரவ் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் இருந்தனர். அப்போது 5 பேரில் யாருக்கு என்ன விருது என்ற நிகழ்வு நடைபெற்றது. இதனை கணேஷ் வெங்கட்ராம் தொகுத்து வழங்கினார்.

அதில் கொடுக்கப்பட்ட 10 விருதுகளின் பெயரும் அதை வென்றவர்களின் விவரமும்:

சாகசக்காரன் விருது: சிநேகன் மற்றும் ஆரவ்

எதார்த்தமானவர் விருது: ஆரவ் மற்றும் பிந்துமாதவி

அமைதிப்படை விருது: பிந்து மாதவி

உழைப்பாளி விருது: சிநேகன்

சுட்டி விருது: ஹரிஷ்

செல்லப்பிள்ளை விருது: பிந்து மாதவி

அதிபுத்திசாலி விருது: சிநேகன்

காதல் மன்னன் விருது: ஆரவ்

அணைக்கும் கரங்கள் விருது: சிநேகன்

ஒழுக்கமானவர் விருது: கணேஷ் வெங்கட்ராம்

இவ்விருதுகளைத் தொடர்ந்து பிந்துமாதவி பிக் பாஸ் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோரில் ஒருவர் வெற்றியாளர் என்பது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

6 mins ago

தமிழகம்

18 mins ago

சுற்றுலா

38 mins ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்