அக்டோபர் 6ம் தேதி ஹைதராபாத்தில் நாக சைதன்யா - சமந்தா திருமணம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள்.
இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறித்துவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகார்ஜுனா வெளியிட்ட பின்பு, சமூகவலைதளத்தில் பல்வேறு பிரபலங்களும் இந்த ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இந்தாண்டுக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது. சமந்தாவுக்கு நிச்சயதார்த்தமாகிவிட்டாலும் தொடர்ச்சியாக படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் நாக சைதன்யா - சமந்தா திருமணம் நடைபெறவுள்ளது. கோவாவில் திருமணம் என்று வெளியான செய்தியை மறுத்து, ஹைதராபாத்திலேயே திருமணம் நடைபெறும் என நாக சைதன்யா உறுதி செய்துள்ளார்.
அக்டோபர் 6-ம் தேதி இருவரது திருமணம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத் தேதியை மட்டும் இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் படம், விஜய் - அட்லீ இணையும் படம், பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
4 hours ago