விஜய் நடித்திருக்கும் 'பைரவா' உடன் விஷால் நடித்திருக்கும் 'கத்தி சண்டை' படமும் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பைரவா'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் போதே 'பொங்கல் வெளியீடு' என்று விளம்பரப்படுத்தியது. 'பைரவா' உடன் எந்தவொரு படமும் போட்டிக்கு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை விநியோகம் செய்கிறது.
ரூபாய் நோட்டுப் பிரச்சினையால் பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை மாற்றியமைத்து வருகிறார்கள். முதலில் நவம்பர் 17-ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது 'கத்தி சண்டை'. டிசம்பர் மாதம் பல்வேறு படங்கள் வெளிவருவதாலும், மேலும் இன்னும் ரூபாய் நோட்டு பிரச்சினையும் முடிவடையததால் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு.
இதனால் 'பைரவா' மற்றும் 'கத்தி சண்டை' இரண்டு படங்களும் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இதனோடு ஒரு சில சிறுமுதலீட்டு படங்கள் வெளியாவதற்கு விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago