சென்னையில் 57% வாக்குப்பதிவு தானா? - ஆர்.ஜே.பாலாஜி காட்டம்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் 57 சதவீதம் வாக்குப்பதிவே நடந்திருப்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் சென்னையில் 57 சதவீதம் தான் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

சென்னையில் மிகவும் கம்மியாக வாக்குப்பதிவு அடைந்தது குறித்து ”சென்னையில் 57 சதவீதம் தானா. அட போங்கடா டேய். தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குபதிவுக்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரமும், அதற்கான உழைப்பும் எல்லாம் வீண். மீதமுள்ள 43 சதவீத மக்களின் ஆன்மா சாந்திடையவதாக" என்று காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குப்பதிவு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டவர் ஆர்.ஜே.பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்