சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி இப்படம் ஒரு மாதம் தள்ளிப்போய் வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
இந்தியா
10 hours ago