‘மாநாடு’ இரண்டாம் பாகம் சாத்தியமா? - வெங்கட் பிரபு பதில்

By செய்திப்பிரிவு

‘மாநாடு’ இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மாநாடு’ இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார். ‘மாநாடு’ படம் குறித்த ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடல் நேற்று (நவ.30) நடந்தது, இதில் வெங்கட் பிரபு பேசியதாவது:

படத்தில் நடைபெறும் டைம் லூப்பின் மூலாதாரமே அப்துல் காலிக் கதாபாத்திரம் தான். படத்தின் இறுதியில் அந்த லூப் மீண்டும் நிகழ்வதாக ஒரு காட்சியை நாங்கள் வைத்திருந்தோம். அப்படியென்றால் வில்லன் தனுஷ்கோடியும் மீண்டும் உயிருடன் வந்துவிடுவார். காரணம் அவர்கள் இருவரது ஆன்மாவும் இணைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

ஏற்கெனவே ஒரு பேட்டியில் ‘மாநாடு’ படத்தின் எடிட்டர் பிரவீன் கேஎல் ‘மாநாடு 2’ படத்துக்கான கதையை இயக்குநர் வெங்கட் பிரபு ஏற்கெனவே தயார் செய்து விட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

18 mins ago

சினிமா

24 mins ago

இந்தியா

5 mins ago

கருத்துப் பேழை

14 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

மேலும்