குரல்வளைக்கு ஓய்வு தேவை; மவுன விரதம் இருக்கப் போகிறேன்: பிரகாஷ்ராஜ் பகிர்வு

By செய்திப்பிரிவு

தனது குரல்வளைக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’, சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட பிரகாஷ்ராஜிடம் அவரது குரல் வளைக்கு ஓய்வு கொடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார்.

''மருத்துவர்களிடம் முழுமையான பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது குரல் வளைக்கு மட்டும் ஒரு வாரம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே நான் மவுன விரதம் இருந்து ஆழ்ந்த அமைதிக்குச் செல்லப் போகிறேன்'' என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் விரைவில் குணமடையப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்