2.0-வில் ஒரு பாடலுடன் மட்டும் கதை சொல்ல ஷங்கர் திட்டம்

By ஸ்கிரீனன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெறும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று (பிப்ரவரி 29) சென்னையின் முக்கிய சாலைகளில் ஒரு பெரிய டேங்க் வருவது போன்ற சில காட்சிகளைப் படமாக்கினார்கள்.

'2.0' படத்தில் ரஜினியுடன் ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்திருக்கிறார் அக்‌ஷய்குமார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்திய சினிமாவில் முழுக்க 3டி ஒளிப்பதிவில் படமாக்கப்படும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் ஷங்கர். முழுக்க சண்டைக் காட்சிகள் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதால் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற இருக்கிறது. மேலும், படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதால் இறுதியில் ஏதேனும் மாற்றம் வந்தால் பாடல்கள் சேர்க்கலாமா, வேண்டாமா என்று திட்டமிட்டு கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு.

இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக 'டை ஹார்ட்' மற்றும் 'ட்ரான்ஸ்பார்மர்ஸ்' படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு பணியாற்றிய 'கென்னி பேட்ஸ்(Kenny Bates)' மற்றும் 'பேட் மேன் Vs சூப்பர் மேன்' படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு பணியாற்றிய ஆரோன் க்ரிபன் (Aaron Crippen) ஆகியோரும் சென்னை வந்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

56 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்