நவம்பரில் தொடங்கும் நலன் குமாரசாமி - ஆர்யா படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது.

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அதனைத் தொடர்ந்து இயக்கவுள்ள படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதற்காகக் கதைகள் எழுதி வந்தார் நலன் குமாரசாமி.

இதை பல்வேறு நடிகர்களின் கூறிவந்தார். இறுதியாக நலன் குமாரசாமி கதையில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து நலன் குமாரசாமி, "நவம்பர் மாதத்திலிருந்து படப்பிடிப்பைத் துவங்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழில் வெளியான அத்தனை வணிகரீதி மாஸ் திரைப்படங்களுக்கான காணிக்கையாக இந்தப் படம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்