வெற்றிமாறன் - சூர்யா இணையும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தவிர்த்து 'ஜெய்பீம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.
இதனை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை' படத்தினை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் பணிகளுக்கு இடையே 'வாடிவாசல்' படத்தின் முதற்கட்டப் பணிகளையும் கவனித்து வருகிறார் வெற்றிமாறன்.
அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குவதற்காகப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. 'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இந்தப் படத்தை உருவாக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
விளையாட்டு
4 hours ago