'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பார்வையாளர்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றனர் என்று எனக்கு தெரியவில்லை. படங்களில் நான் சொல்ல விரும்பும் விஷயங்களின் மூலம் அதை நான் உணர்கிறேன். என்னுடைய சக கலைஞர்களின் வாயிலாக அதை நான் சிறப்பாக சொல்ல விரும்புகிறேன். சில நேரங்களில் என்னால் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம், ஆனால் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு என்னுடைய நடிகர்களின் சிறப்பான நடிப்பின் மூலம் என்னுடைய சிறப்பான உழைப்பை எப்போதும் கொடுக்கிறேன். பெரிய நடிகர் சிறிய நடிகர் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை பொறுத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்று தான்.
இதற்கு முன்னால் இந்திய சினிமா வடக்கு என்றும் தெற்கு என்றும் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடைவெளி நாம் இணைத்து விட்டோம் என்று தெரிகிறது. இதன் மூலம் ‘பாகுபலி’ கேஜிஎஃப்’ போன்ற கமர்ஷியல் படங்களை தாண்டி தென்னிந்திய படங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.
'சார்பட்டா பரம்பரை' ஓடிடியில் வெளியானதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அது டிஜிட்டலில் வெளியானதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று உணர்ந்தோம். காரணம் நல்ல ஒலி அமைப்பு, பார்வையாளர்களின் இருப்பு ஆகியவை ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருந்திருக்கும்.
இவ்வாறு பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago