ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் உறுதியாகவுள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாக பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் 2 வார காலம் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா ஊரடங்கு சமயத்தில் இறுதிக்கட்டப் பணிகளிலும் தீவிரம் காட்டியுள்ளது படக்குழு.
இதனால், படமாக்க வேண்டிய காட்சிகளுக்கு மட்டுமே இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற வேண்டும். டப்பிங் பணிகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டது படக்குழு. இதுவரை படமாக்கிய காட்சிகள் அனைத்தையுமே படக்குழுவினர் திரையிட்டுப் பார்த்துள்ளனர். அப்போது இயக்குநர் சிவாவை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இதர காட்சிகளின் படப்பிடிப்பை முடித்து, தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கரோனா இரண்டாவது அலை தீவிரத்தால் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என்று கருதப்பட்டது. படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி முடிந்துவிட்டதால், தீபாவளி வெளியீட்டில் உறுதியாக உள்ளது 'அண்ணாத்த' படக்குழு.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago