இரண்டே நாட்களில் ‘மாநாடு’

By செய்திப்பிரிவு

சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன்,எஸ்.ஜே.சூர்யா நடிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் 2 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. விமானத்தின் உள்பகுதியில் படமாக்க வேண்டிய இந்த காட்சிகளை ஓசூரில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

கடந்த வாரமே இதற்கு திட்டமிட்ட நிலையில், வெங்கட் பிரபுவின் தாய் மறைவு காரணமாக, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தவிர, ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, அந்த காட்சிகளை மட்டும் படமாக்காமல் விட்டுள்ளனர். இதற்கிடையே, எடிட்டிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன. ஊரடங்கு முடிந்த பிறகு, அந்த 2 நாள் காட்சிகளை படமாக்கியதும் முழு படமும் தயாராகிவிடும் என்கிறது படக் குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்