தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு கிருத்திகா உதயநிதி தயாராகியுள்ளார்.
மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தை இயக்கினார்.
அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது தனது புதிய படத்துக்கான கதை, திரைக்கதையை முடித்துத் தயாராகிவிட்டார் கிருத்திகா உதயநிதி.
இந்தப் படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள், தயாரிப்பாளர் யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
3 mins ago
தமிழகம்
38 mins ago
ஓடிடி களம்
40 mins ago
விளையாட்டு
55 mins ago
சினிமா
57 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago