அதர்வாவுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடங்கினார் அதர்வா. அதனை ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பிவிட்டார். அவருடன் ஒட்டுமொத்த படக்குழுவினரும் சென்னை திரும்பிவிட்டார்கள்.
சென்னை திரும்பிய சில நாட்களிலேயே, அதர்வாவுக்கு கரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அதர்வா செய்து கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"சில லேசான அறிகுறிகளுக்குப் பிறகு எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேவையான முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் முழுமையாக மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்"
இவ்வாறு அதர்வா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
42 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
50 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
56 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago