மீண்டும் நாயகனாகும் சுந்தர்.சி

By செய்திப்பிரிவு

இயக்குநர் மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக சுந்தர்.சி நடிக்கவுள்ளார்.

ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அரண்மனை 3' படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்துக்குப் பின், புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார் சுந்தர்.சி. இதனை 'கட்டப்பாவ காணோம்' படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கவுள்ளார். வி.ஆர்.மணிகண்ட ராமன் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (மார்ச் 15) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

க்ரைம் டிராமா பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் சுந்தர்.சி உடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக மணி பெருமாள், இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, எடிட்டராக லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநராக லக்‌ஷ்மி தேவா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

16 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்