சிங்கம் 3-க்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் சூர்யா

By ஸ்கிரீனன்

'சிங்கம் 3' படத்தைத் தொடர்ந்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் நடிகர் சூர்யா.

சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்க விக்ரம் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்க 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று, படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

'24' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

'சிங்கம் 3' படத்தைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. 'அதடு', 'ஜல்சா', 'ஜூலாயி', 'Attarintiki Daredi', 'S/O சத்தியமூர்த்தி' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் த்ரிவிக்ரம்.

இப்படத்தை ஹாரிகா மற்றும் ஹாசைன் கிரியேஷன்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

38 mins ago

விளையாட்டு

52 mins ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்