'பத்து தல' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க டிஜே ஒப்பந்தமாகியுள்ளார்.
கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'முஃப்தி'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது அந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்துமே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன. 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா மீதமுள்ள காட்சிகளை இயக்கவுள்ளார். 'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இதில் தாசில்தார் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து முக்கியக் கதாபாத்திரத்தில் டிஜே ஒப்பந்தமாகியுள்ளார். இன்று (ஜனவரி 6) அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இன்னும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதைப் படக்குழுவினர் முடிவு செய்யவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியானாலும், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிலம்பரசன். அதனைத் தொடர்ந்து 'பத்து தல' படத்துக்காகத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago