'ஜல்லிக்கட்டு' படத்தால் ஆஸ்கர் விருதை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.
லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது. இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இந்தப் படத்தைத் தேர்வு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் 'ஜல்லிக்கட்டு' படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் 'ஜல்லிக்கட்டு' திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன். இந்தப் படம் இந்தியாவின் பரிந்துரையாக ஆஸ்கருக்குச் செல்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் நாம் விருதை வெல்லும் நல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்".
இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago