நவம்பர் 21-ம் தேதி சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தற்போது புதுச்சேரியில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 24-ம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இதுவரை 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானாலும், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை. தற்போது நவம்பர் 21-ம் தேதி 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
'மாநாடு' படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago