'ஈஸ்வரன்' படப்பிடிப்பு நிறைவு: தீபாவளிக்கு டீஸர்

By செய்திப்பிரிவு

'ஈஸ்வரன்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என்றும், தீபாவளிக்கு டீஸர் வெளியாகும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வந்தார். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு, திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வந்தார்கள். தற்போது 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிம்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'ஈஸ்வரன்' படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தீபாவளிக்கு டீஸர் வெளியாகும். இந்த அழகான பயணத்துக்கு எனது 'ஈஸ்வரன்' அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் விசேஷ நன்றிகள்".

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

பொங்கல் வெளியீடு என்று ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அறிவித்துவிட்டதால், இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக களமிறங்கவுள்ளது படக்குழு. 'ஈஸ்வரன்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கோயில்களில் தரிசனத்தை முடித்துவிட்டு, நவம்பர் 9-ம் தேதி முதல் 'மாநாடு' படப்பிடிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்