மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி: படப்பூஜையுடன் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'தடம்' படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படத்தை இயக்க மகிழ் திருமேனி ஒப்பந்தமானார். மேலும், 'தடம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.

கரோனா அச்சுறுத்தலால் உதயநிதியின் படம் தாமதமானது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதால், சென்னையில் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாயகியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவாளராக தில்ராஜ், இசையமைப்பாளராக அரோல் கொரோலி, கலை இயக்குநராக டி.ராமலிங்கம், எடிட்டராக ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

நவம்பர் 9-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதலில் உதயநிதி ஸ்டாலின் - நிதி அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்