நடிகர் கவுண்டமணி நலமுடன் இருக்கிறார்: வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை

By செய்திப்பிரிவு

நடிகர் கவுண்டமணி நலமுடன் இருப்பதாக அவரது தரப்பிலிருந்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கவுண்டமணியின் உடல்நிலை குறித்து ஒரு தனியார் யூடியூப் சேனலில் செய்தி வந்தது. அவரது நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டதால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக, கவுண்டமணியின் தரப்பில் விசாரிக்க அவரது தரப்பில் தொடர்பு கொண்டபோது, "யூ டியூப்பில் நடிகர் கவுண்டமணி அவர்களைப் பற்றி வதந்தியை கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இது போல் தவறான செய்தியை பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளிக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார். அவர்களே அந்த யூ டியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று தெரிவிக்கப்பட்டது.

கவுண்டமணியின் தரப்பிலிருந்தே அவர் நலமுடன் இருப்பதாக உறுதியான தகவல் வந்துள்ளதால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். கடைசியாக கவுண்டமணி 2016ஆம் ஆண்டு வாய்மை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்