தேசத்தின் குரல் ஓய்ந்துவிட்டது: எஸ்பிபி மறைவுக்கு அனிருத் புகழாஞ்சலி

By செய்திப்பிரிவு

தேசத்தின் குரல் ஓய்ந்துவிட்டது என்று எஸ்பிபி மறைவு குறித்து அனிருத் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவு குறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தேசத்தின் குரல் ஓய்ந்துவிட்டது. ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். உங்களுடன் ஸ்டுடியோவில் மறக்கமுடியாத, விலைமதிக்க முடியாத தருணங்கள். உங்கள் இழப்பையும் உங்கள் அன்பையும் என்றும் உணர்வேன்".

இவ்வாறு அனிருத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

16 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

51 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

36 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்