'தெளலத்' போஸ்டரில் தனது புகைப்படம்: யோகி பாபு அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

'தெளலத்' படத்தின் போஸ்டரில் தனது புகைப்படத்தை வைத்து விளம்பரப்படுத்தி இருப்பதால் யோகி பாபு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்தார். இதனால் தனது இதர படங்கள் பாதிக்கப்படுவதாகவும், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்தார்.

இதனிடையே, ரைட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள படம் 'தெளலத்'. ஷக்தி சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் ராஷ்மி கெளதம், ஜெயபாலன், ஐசக், வைரவன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது.

இந்தப் படத்தின் புதிய போஸ்டரில் யோகி பாபுவை மட்டும் மையப்படுத்தி வெளியிட்டுள்ளனர். இது யோகி பாபுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக யோகி பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்