நடிகராவதற்கு முன் நடனக் கலைஞர்: கிருஷ்ணா பகிர்வு

By செய்திப்பிரிவு

நடிகராவதற்கு முன் நடனக் கலைஞராக இருந்ததாக கிருஷ்ணா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

'அஞ்சலி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதனைத் தொடர்ந்து 'அலிபாபா' படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளர் சேகரின் மகன். இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார்.

'கழுகு', 'யாமிருக்க பயமேன்', 'வானவராயன் வல்லவராயன்', 'பண்டிகை' உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார் கிருஷ்ணா. தற்போது நடிகராக ஆவதற்கு முன்பு நடனக் குழுவில் நடனமாடி சம்பாதித்தாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார் கிருஷ்ணா.

இது தொடர்பாக கிருஷ்ணா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

"குழுவில் நடனமாடி சம்பாதித்த நாட்களின் எனது இந்தப் புகைப்படம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு ரூ.1500 கிடைத்தது எனக்கு நினைவில் உள்ளது. பல நட்சத்திரக் கலை விழாக்களில் நான் குழுவில் ஒரு நடனக் கலைஞராக ஆடியுள்ளேன். விரைவில் அந்தப் புகைப்படங்களைப் பகிர்கிறேன்"

இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்