கரோனா ஊரடங்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முன்வைக்கும் 7 கோரிக்கைகள்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வேலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் மார்ச் 19-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தியதால் திரையரங்குகள் இப்போது வரை மூடியே உள்ளன.

5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் சூழல், பல தொழில்துறையினருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் திரையரங்கம் திறப்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்புமே இல்லை.

இதனிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

"அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்க தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தரக்கூடியது. இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000ம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைக்கிறது. அவை பின்வருமாறு:

* திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம். அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்

* தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்கள், போக்குவரத்து செலவுகள் விலையேற்றம் பெற்றுள்ளன. இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களைக் கண்டுகளிப்பது சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும். இதன் காரணமாக டிக்கெட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கக் கூடிய திரையரங்கு தொழிலைப் பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்த வேண்டும்

* தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது இவற்றில் தனி திரையரங்குகள் 700. இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளைக் கொண்ட மால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளது. * தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்

* தனி திரையரங்குகளுக்கான GST வரியை 5% சதவிகிதமாகக் குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்கு தற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு (no input tax credit) முறையை அமல்படுத்த வேண்டுகிறோம்.இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது ₹100-க்கு விற்பனை செய்யப்படும் (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை84 ரூபாய் 5% GSTயுடன் சேர்த்துக் குறையும். இதன் காரணமாகத் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்

* மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம். தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில்தான் வருகை இருந்தது மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும். இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்குக் குறைவாகவே வருவார்கள் இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்

* தற்பொழுது கரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகைதர வேண்டுகிறோம்

* மேலும் தற்பொழுது முழு முடக்க காலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தொழில் துவங்கிய பிறகு திரை தொழில் சகஜ நிலை திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகை தர வேண்டுகிறோம்

தமிழகத்தில் கிராமங்கள் சிறுநகரங்களில் கெளரவத்திற்காகக் காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்குகளை அழிவிலிருந்து காத்திட மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்"

இவ்வாறு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்