சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நயன்தாரா

By செய்திப்பிரிவு

'நெற்றிக்கண்' படத்துக்கான சில சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நயன்தாரா நடித்துள்ளார்.

தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வரும் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தக் காட்சிகள் படமாக்கும் போது நயன்தாராவுக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்தக் காட்சிகள் அனைத்துமே பார்வையாளர்கள் வெகுவாக ரசிகர்கள் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

மேலும், இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கரோனா அச்சம் முடிந்தவுடன், இதர 20% படப்பிடிப்பையும் முடித்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படம் 2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்