'நெற்றிக்கண்' படத்தில் நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஜ்மல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்து வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் திருப்பம் ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரமாக அஜ்மல் கதாபாத்திரம் இருக்கும் எனவும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.
கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கரோனா அச்சம் முடிந்தவுடன், இதர 20% படப்பிடிப்பையும் முடித்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்தப் படம் 2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
இந்தியா
51 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago