'ஹே சினாமிகா' என்ற படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார் நடன இயக்குநர் பிருந்தா.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அதிலும், மணிரத்னம் படங்கள் என்றாலே நடன இயக்குநர் பிருந்தாவாக தான் இருக்கும். இப்போது அவரும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் பிருந்தா. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடக்கம் இன்று (மார்ச் 12) சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் மணிரத்னம், கே.பாக்யராஜ், குஷ்பு, சுஹாசினி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பிருந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.இயக்குநர் மணிரத்னம், கே.பாக்யராஜ் இருவரும் முதல் காட்சியை இயக்க, குஷ்பு மற்றும் சுஹாசினி இருவரும் க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்கள்.
ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர் மற்றும் கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago