‘சூப்பர் சிங்கர்’ நடுவராக நகுல்

By செய்திப்பிரிவு

‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் 7 நிகழ்ச்சியின் நடுவராக நகுல் பங்கேற்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. திறமையான பாடகர்களை அடையாளம் காணும் இந்த நிகழ்ச்சி, சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.16 வயதுக்கு மேற்பட்டோர் சீனியர் பிரிவிலும், அதற்கு கீழுள்ளோர் ஜூனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பலர், இன்றைக்கு சினிமாவில் பின்னணிப் பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.

‘சூப்பர் சிங்கர்’ சீனியர் 7-வது சீஸனின் இறுதிப்போட்டி, கடந்த வருடம் (2019) நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இதில், மூக்குத்தி முருகன் முதல் பரிசைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஜூனியர் பிரிவின் 7-வது சீஸனுக்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்று வந்தன.

தற்போது ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் சீஸன் 7-க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 22-ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில், ஷங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

அவர்களுடன், நடிகர் நகுலும் ஒரு நடுவராகப் பங்கேற்கிறார்.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

முதல் பார்வை: வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்
அளப்பரிய காதல், அன்பு: நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பகிர்வு
மீம் விமர்சனம்- நான் சிரித்தால்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

26 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்