‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் 7 நிகழ்ச்சியின் நடுவராக நகுல் பங்கேற்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. திறமையான பாடகர்களை அடையாளம் காணும் இந்த நிகழ்ச்சி, சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.16 வயதுக்கு மேற்பட்டோர் சீனியர் பிரிவிலும், அதற்கு கீழுள்ளோர் ஜூனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பலர், இன்றைக்கு சினிமாவில் பின்னணிப் பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.
‘சூப்பர் சிங்கர்’ சீனியர் 7-வது சீஸனின் இறுதிப்போட்டி, கடந்த வருடம் (2019) நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இதில், மூக்குத்தி முருகன் முதல் பரிசைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஜூனியர் பிரிவின் 7-வது சீஸனுக்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்று வந்தன.
தற்போது ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் சீஸன் 7-க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 22-ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில், ஷங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.
அவர்களுடன், நடிகர் நகுலும் ஒரு நடுவராகப் பங்கேற்கிறார்.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
26 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago