பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள 'பொன் மாணிக்கவேல்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
இந்தித் திரையுலகில் சல்மான் கான் படங்களைத் தொடர்ச்சியாக இயக்கி வந்தாலும், தமிழ் திரையுலகில் சில படங்களை முடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார் பிரபுதேவா. அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
இதில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் முகில் இயக்கத்தில் உருவான 'பொன் மாணிக்கவேல்' படமும் அடங்கும். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டாலும், சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்தது படக்குழு.
தற்போது, பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
27 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago