சூரி நாயகனாக நடிக்கவுள்ள படத்தின் களத்தை வெற்றிமாறன் மாற்றிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தை இயக்கினார் வெற்றிமாறன். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஷாரூக் கான், ரஜினி, விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களும் அவரோடு இணைந்து படம் பண்ண ஆர்வம் காட்டினார்கள்.
இறுதியில் மீண்டும் தாணு தயாரிப்பில், சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெற்றிமாறன். ஆனால், அந்தப் படத்துக்கு முன்பே சூரி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். ஏனென்றால், 'அசுரன்' வெளியாகும் முன்பே சூரி படத்துக்கான அட்வான்ஸ் தொகையை வெற்றிமாறன் வாங்கிவிட்டார்.
முதலில் மறைந்த நா.முத்துக்குமாரின் கவிதையை வைத்து உருவாக்கிய கதையில் சூரியை நடிக்கவைத்து இயக்க வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார். ஆனால், தற்போது அந்தத் திட்டத்தை மாற்றிவிட்டார். புதிதாக நாவல் ஒன்றை வைத்து கதையை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன்.
இந்தக் கதை முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றிமாறன் வெளிநாட்டில் படமாக்கும் முதல் படமாக சூரி படம் அமைந்துள்ளது. தற்போது இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சூரி படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 mins ago
ஜோதிடம்
9 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago